புதன், 26 அக்டோபர், 2011



 
நான் விரும்பியபோதெல்லாம் 
எனக்காக கவிதை எழுதி 
விரும்பாதபோதும் 
எனக்காக Notes எழுதி 
கவிதை என்றதும்
என் பெயர் எழுதி 
உன் உயிர் தீரும் வரையில் 
எனக்காகவும்..
சில நேரங்களில்
பிறருக்காகவும் 
ஆறாவது விரலாய்
இணைந்தாய்...
சிலநேரங்களில் உன்னை
தூக்கி எரிந்திருகிறேன்
பலநேரங்களில் உன்னை 
அலட்சியப்பத்திருகிறேன்..
இருந்தும் என்னை ஒருபோதும் 
நிராகரித்ததில்லை நீ !!
இப்போது என் PENஆக
வாழும் நீ
அடுத்த ஜென்மத்தில் 
என் பெண்ணாக வா!